நடிகை சாந்தினி புகார் : முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது
Jun 20, 2021, 14:04 IST
By
நடிகை சாந்தினி அளித்த புகாரில், தலைமறைவான முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது.
தள்ளுபடி :
நடிகை சாந்தினி அளித்த புகாரின் அடிப்படையில், அடையாறு போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில், முன் ஜாமீன் அளிக்கக்கோரி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, தலைமறைவான முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை போலீசார் மணிகண்டனை தேடி வந்தனர்.
கைது :
இந்நிலையில், பெங்களூரில் தங்கி இருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்து, ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.