நாளைய மேட்ச் : டோனியின் சாதனையை முறியடிக்கிறார் ரிஷப் பண்ட்?
இந்திய அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து, அங்கு 3 டெஸ்ட் 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, நாளை தொடங்க உள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் புதிய சாதனை ஒன்றை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் கேட்ச் மற்றும் ஸ்டம்பிங் மூலம் அவர் பேட்ஸ்மேனை 97 முறை (89 கேட்ச் மற்றும் 8 ஸ்டம்பிங்) அவுட் செய்துள்ளார். அவர் இதனை 25 டெஸ்ட் போட்டிகளில் செய்துள்ளார்.
முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரான எம்.எஸ் டோனி 36 போட்டிகளில் இச்சாதனையை படைத்துள்ளார்.
ரிஷப் பண்ட், எம்.எஸ்.டோனியின் சாதனையை தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் முறியடிக்க அதிக வாய்ப்புள்ளது என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
*