என்னோட திறமை, இப்பவும் அப்டியேதான் இருக்கு : நிரூபித்தார் ஜாம்பவான் ரொனால்டோ
மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோ, முதல் போட்டியில் இரண்டு கோல்கள் அடித்து அசத்தினார்.
போர்ச்சுக்கல் நாட்டின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் கடந்த 2003-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடினார். அதன்பின், ரியல் மாட்ரிட் அணிக்கு மாறினார்.
அந்த அணிக்காக, சுமார் 9 ஆண்டுகள் விளையாடினார். அதன்பின், யுவான்டஸ் அணிக்கு சென்றார்.
தற்போது, மீண்டும் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு திரும்பியுள்ளார். நியூகேஸ்டில் அணிக்கெதிராக முதன்முறையாக களம் இறங்கினார்.
முதல் போட்டியிலேயே, இரண்டு கோல்கள் அடித்து அசத்தினார். மான்செஸ்டர் யுனைடெட் 4-1 என வெற்றி பெற்றது. இதில் ரொனால்டோ (45+2), 62 நிமிடங்களில் கோல்கள் அடித்தார்.
இதன்மூலம், தனது திறமை இன்னும் குறையவில்லை என்பதை நிரூபித்துள்ளார்.
*