தேசிய அளவிலான பளு தூக்குதல் போட்டி : தங்கம் வென்றார், நம்ம சிங்கப்பெண் மீரா..

By 
mirabai

குஜராத் மாநிலத்தில் 36வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த மீராபாய் சானு, தேசிய விளையாட்டுப் போட்டியின் பளுதூக்குதல் பிரிவில் எதிர்பார்த்தபடியே தங்கம் வென்று அசத்தினார்.

பெண்களுக்கான 49 கிலோ எடைப் பிரிவில் இவர் மொத்தம் 191 கிலோ எடையைத் தூக்கி தங்கம் வென்றார். இந்த பிரிவில் சஞ்சிதா சானு வெள்ளிப் பதக்கமும் (187 கிலோ), ஒடிசாவின் ஸ்னேகா சோரன் வெண்கலப் பதக்கமும் (169 கிலோ) வென்றனர்.

சமீபத்தில் நடந்த பயிற்சியின்போது தனது இடது மணிக்கட்டில் காயம் ஏற்பட்டதாகவும், அதன்பிறகு மேலும் பிரச்சனை வராமல் பார்த்துக்கொண்டதாகவும் மீராபாய் சானு கூறினார்.

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் மணிப்பூரின் பிரதிநிதியாக பங்கேற்றது பெருமையான தருணம். தொடக்க விழாவில் மணிப்பூர் குழுவை வழிநடத்தும்படி என்னைக் கேட்டபோது உற்சாகம் இரட்டிப்பானது என்றும் மீராபாய் சானு கூறினார்.

Share this story