மத்திய அரசு பயப்படுகிறது : ராகுல்  விமர்சனம்
 

By 
Federal government fears Rahul criticism

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தலைநகர் டெல்லியில் விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

விவசாயிகளின் எதிர்ப்புக்கு பணிந்த மத்திய அரசு, 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்தது.

இதன்படி, 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் மசோதா  நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது. விவாதங்கள் இன்றி, இந்த மசோதாக்கள்  இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில், இது குறித்து மத்திய அரசை சாடியுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறியிருப்பதாவது :

வேளாண் சட்டங்கள் குறித்து விவாதம் நடத்த மத்திய அரசு அச்சம் கொண்டுள்ளது. விவசாயிகள் உயிரிழப்பு தொடர்பாக, விவாதம் நடைபெற்று இருக்க வேண்டும். 

விவாதம் இன்றி வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டது, மத்திய அரசின் பலவீனத்தையே காட்டுகிறது.  

3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்பது எங்களுக்கு நன்கு தெரியும்' என்றார்

Share this story