ஜனாதிபதியுடன் மகாராஷ்டிரா முதலமைச்சர் சந்திப்பு : பின்னணி என்ன?
Jul 9, 2022, 18:18 IST
By
மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை இன்று சந்தித்துப் பேசினர்.
தலைநகர் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும், ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது மகாராஷ்டிராவின் தற்போதைய நிலவரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியிருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.
மேலும், பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரையும் சந்தித்தனர். ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் பிரதமர் மோடியையும் சந்திக்க உள்ளனர்.
*