இருமொழிக் கொள்கையே, தமிழக அரசின் நிலைப்பாடு : அமைச்சர் பொன்முடி பேச்சு
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.
இதில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
அதன் பின்னர், அமைச்சர் பொன்முடி பேசியதாவது :
ஒரு காலத்தில் பெண்கள் படிக்கவே கூடாது என்ற சமூகம் இருந்தது. ஆனால், எல்லோரும் படிக்க வேண்டும் என்ற உணர்வை உருவாக்கியிருப்பதுதான் திராவிடன் மாடல், பெரியார் மண்.
புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல திட்டங்களை பின்பற்ற தயாராக உள்ளோம்.
இந்தியை கட்டாயமாக்கக்கூடாது, மூன்றாவது மொழியாக எதை வேண்டுமானாலும் படிக்கலாம்.
இருமொழிக் கொள்கையே தமிழ்நாடு அரசின் கொள்கை. தமிழக மாணவர்கள் எந்த மொழியையும் கற்க தயாராக உள்ளனர்.
தமிழ்நாடு மக்களின் உணர்வுகளை கவர்னருக்கு தெரியப்படுத்தவே இதை கூறுகிறேன்.
நாங்கள் இந்தி உட்பட எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்பார்கள்.
இன்று, கோவையில் பானிபூரி கடை நடத்துபர்கள் யார்?' என அமைச்சர் பேசினார்.
*