அண்ணா திமுக நெறி..யும், நரி..யும் : மருது அழகுராஜ் விமர்சனம்
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில்.. ஓபிஎஸ், ஈபிஎஸ் குறித்து, அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள கவிதைச் செய்தி வருமாறு :
* குயிலுக்கும்
காகத்துக்கும்
குறித்த நிறம்
ஒன்று தான்..
ஒன்றின்
குரல்
இனிக்கிறது
மற்றொன்றின்
குரலோ
இம்சிக்கிறது..
* கழுதைக்கும்
குதிரைக்கும்
காணும் தோற்றம்
ஒன்று தான்..
ஒன்று,
பொதி
சுமக்கிறது
மற்றொன்று,
போர் வீரனை
சுமக்கிறது..
* புலிக்கும்
பூனைக்கும்
பொருந்தும் தோற்றம்
ஒன்று தான்..
ஒன்றை
பார்த்து
ஊரே ஒடுங்குது..
இன்னொன்று
கண்டு,
எலி மட்டுமே
நடுங்குது..
* நரிக்கும்
நாய்க்கும்
காணும் தோற்றம்
ஒன்று தான்..
ஒன்று
விசுவாசத்தின்
அடையாளம்..
மற்றொன்று,
சூழ்ச்சி செய்யும்
அவமானம்..
அதுபோலத்தான்,
ஒரு வாக்கில்
இருவரும்
உருவானவர்
என்றாலும்
ஒருவர்,
ஒற்றுமைக்கு
பாடுபடுகிறார்
மற்றொருவர்,
குத்துக் கோல் போலவே
கூறுபோட
படாதபாடு
பாடுகிறார்..
* ஆம்..
ஓ.பி.எஸ்-
கட்டிச் சேர்க்கும்
கயிறு..
இ.பி.எஸ்-
வெட்டிப்
பிளக்கும்
கோடாரி..
ஓ.பி.எஸ்,
நெறி பிறழாதவர்
ஈ.பி.எஸ்,
நரி பிறப்பானவர்
* ஓ.பி.எஸ்-
அம்மா காட்டிய
அடையாளம்..
ஈ.பி.எஸ்-
அண்ணா திமுகவின்
அவமானம்..
* ஆக...
ஒன்றரைக் கோடி
தொண்டரும்
ஒரு நிமிடம்
யோசிப்போம்
ஓ.பி.எஸ்ஸிடம்
கழகம் சேர்ந்திட
உளமார
பிரார்த்திப்போம்..
பொல்லாத எடப்பாடி
இல்லாத கழகம்..
பொன்விழா இயக்கத்து
போர்க்கோல சபதம்..
இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.