எட்டுத் திருக்கோலம் கொண்ட கண்ணனின் காட்சி பாரீர்.!
தீயவர்களையும் தீமைகளையும் அழித்து, நல்லோர்களையும் நன்மைகளையும் காப்பதற்காக, உருவானதே ஸ்ரீகிருஷ்ண அவதாரம்.
கிருஷ்ண லீலையை மனம் ஒன்றிக் கேட்டால் பசி, தாகம் ஏற்படாது. இங்கு, ஸ்ரீகிருஷ்ணரின் 8 வகை திருக்கோலம் பார்ப்போம்.
1. சந்தான கோபால கிருஷ்ணர் : யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம்.
2. பால கிருஷ்ணன் : தவழும் கோலம், பலரின் பூஜை அறையில் இப்படத்தையே காணலாம்.
3. காளிய கிருஷ்ணன் : காளிங்க மர்த்தனம் புரியும் கிருஷ்ணன்.
4. கோவர்த்தனதாரி : கிருஷ்ணன் தன் சுண்டு விரலால், கோவர்த்தன கிரியைத் தூக்கும் கோலம்.
5. ராதா-கிருஷ்ணன் (வேணுகோபாலன்) : வலது காலை சிறிது மடித்து, இடதுகாலின் முன்பு வைத்து, பக்கத்தில் ராதை நின்றிருக்க குழலூதும் கண்ணன்.
6. முரளீதரன் : இதில், கிருஷ்ணன் நான்கு கைகளுடன், ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதனாய் நின்றிருக்கும் திருக்கோலம். இது, தென் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்றது.
7. மதன கோபால் : அஷ்ட புஜங்களை உடைய குழலூதும் முரளீதரன்.
8. பார்த்தசாரதி : அர்ஜூனனுக்கு கீதை உபதேசிக்கும் திருக்கோலம்.